About us

படைப்புகளையும், படைப்பாளிகளையும் பற்றிய சிறு கண்ணோட்டம்

ஒரு படைப்பாளிக்கு மரணம் எப்போது?
  .
  .
  .
  .
  அவனது படைப்புகள் பேசப்படும் வரை அவன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான். ஆயிரம் ஆண்டுகளை தாண்டியும் வாழுகிறான், வாழுவான். இறவா நிலையே படைப்பாளியின் சிறப்பு.
  திருவள்ளுவரும், கம்பனும், தொல்காப்பியரும், அவ்வை மூதாட்டியும் அவ்வாறே...... சங்க இலக்கியங்களும், நவநாகரீகப் படைப்புகளும் அவ்வாறே..... தமிழ் மட்டுமல்லாது, மற்ற மொழிப் படைப்புகளும் அவ்வாறே...... படைப்புகள் பேசப்படும்வரை அதன் ஆசிரியருக்கும் இறவா நிலையே.......
  படைப்புகள் விவாதிக்கப்படாமல், பேசப்படாமல் மறைக்கப்படும்போதுதான் / மறுக்கப்படும்போதுதான் அவைகள் இறக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.

     படைப்புகளை, படைப்பாளிகளை தேடியதன் பலனாகவே வி.பி.எக்ஸ் பதிப்பகம் உருவானது. தமிழ் படைப்புகளை உலகறியச் செய்வதே எங்கள் நிறுவனத்தின் முதல்பணி.

     தனது கதைகளில், கவிதைகளில், சிறுகதைகளில், கருத்துகளில் ஏதோவென்று-ஏதோவொரு பத்திரிக்கையில் வெளியானதைக் கண்டு மகிழ, அவனது இதர உருவாக்கங்கள் / பொக்கிஷங்கள் ‘தான் எப்போது வெளிப்படுத்தப்படுவேன்?’ என ஏங்கித் – தேங்கிக் கிடைப்பதைக் கண்டும் விடாமுயற்சியால் தொடர்ந்து எழுதி – எழுதியே சேர்த்து வைத்திருக்கும் படைப்பாளிகளை சிவப்பு கம்பளமிட்டு வரவேற்க வி.பி.எக்ஸ் பதிப்பகம் தயாராக இருக்கிறது.

     தனது சில படைப்புகள் ‘புத்தகமாக’ வெளியான பின்னும் முதல் படைப்பை வெளியிட்ட சிரமத்தினைப் போன்றே திரும்பத்-திரும்ப அலைகளிக்கப்பட்டு ‘தனது கற்பனைகளுக்கு என்றைக்குத்தான் முழு வடிவம் கொடுக்கப் போகிறோமோ!?’ என்று கலங்கிநிற்கும் அனுபவ எழுத்தாளர்களுக்கு தோள் கொடுக்கும் உறவாய், பாலமாய் வி.பி.எக்ஸ் பதிப்பகம் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

     அவர்களின் எழுத்துக்களை பாதுகாப்பது மட்டுமில்லாது மீண்டும் புத்துணர்ச்சியோடு எழுதவும், முறையான அங்கீகாரத்தைப் பெற்றுத்தரவும், தகுந்த வழிமுறைகளோடு இணையத்தை நோக்கி வந்திருக்கிறோம்.

      படைப்பாளிகள் விரும்பும், வாழ்த்தும் அமைப்பாக வி.பி.எக்ஸ் பதிப்பகம் என்றைக்கும் செயல்படும்.

      புத்தகங்களை தேடித்தேடி படிக்கும் ஆர்வலர்களுக்கும், சிறந்த படைப்புகளை உயிராய் ஆராதிக்கும் அன்பர்களுக்கும் ‘எங்களிடமும் சில புத்தகங்கள் இருக்கிறது. அதனை சுவைத்துப் பார்க்கத் தயாரா?’ என மார்தட்டி அழைக்கும் கலங்கரை விளக்கே வி.பி.எக்ஸ் பதிப்பகம்.

      தொடர்ந்து உங்கள் அன்பினாலும், ஆதரவாலும் உன்னத இடத்தை அடைவோம்.